ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை: ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும், மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் அளவில்லாத தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “GSR 220” என்ற புதிய விதிமுறையால் சிறிய மருந்துக் கடைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில், “ஆன்லைனில் தற்போது தடை செய்யப்பட்ட மருந்துகள் கூட எளிதாக கிடைத்து வருகின்றன. தள்ளுபடி என்ற பெயரில் போலி மருந்துகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளில் செயல்படும் மருந்துக் கடைகளை அணுகலாம். மேலும், ஒவ்வொரு கடை முன்பும் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்,” என்றார்.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “GSR 220” என்ற புதிய விதிமுறையால் சிறிய மருந்துக் கடைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில், “ஆன்லைனில் தற்போது தடை செய்யப்பட்ட மருந்துகள் கூட எளிதாக கிடைத்து வருகின்றன. தள்ளுபடி என்ற பெயரில் போலி மருந்துகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளில் செயல்படும் மருந்துக் கடைகளை அணுகலாம். மேலும், ஒவ்வொரு கடை முன்பும் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்,” என்றார்.