கோவை மாநகராட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்!

கோவை மாநகராட்சியில் 6 பேருக்கு ஓட்டுநர் பணி வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம், கோவை மாநகராட்சிக்கு எதிராக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் (பணிமாற்று அடிப்படையில்) ஓட்டுநராக பணிபுரியும் சமூகநீதி தூய்மை பணியாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜெயபால் மற்றும் 6 தொழிலாளர்கள் ஓட்டுநர் பணியிடம் வழங்க கோரி, ஜெயபால் உள்ளிட்ட 6 தூய்மை பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007இல் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேருக்கும், ஓட்டுநர் பணியிடம் வழங்க வேண்டும் என்று கடந்த 2014இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கோவை மாநகராட்சி மேல்முறையீடு செய்ததில், மேல்முறையீட்டு வழக்கில் விசாரித்த நீதிமன்றம், ஏழு பேருக்கும் ஓட்டுநர் பணி மற்றும் நிலுவை தொகையுடன் கூடிய ஓட்டுநர் ஊதியத்தை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கோவை மாநகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும், பட்சத்தில் தங்களின் தரப்பின் கருத்தை கேட்க கோரும் கேவியட் மனு, ஓட்டுநர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...