கோவை அருகே கேக்கிற்கு பணம் கேட்டதால் டீக்கடையை சூறையாடிய இளைஞர்கள்! - சிசிடிவி வீடியோ

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாப்பிட்ட கேக்கிற்கு கடைக்காரர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த 5 இளைஞர்கள், டீக்கடையில் இருந்த கண்ணாடி ஜார்களை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தகாமராஜ் என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். நேற்று இரவு அவரது கடைக்கு 5 இளைஞர்கள் தேநீர் அருந்த வந்துள்ளனர்.



அப்போது, அவர்கள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேக்குகளை சாப்பிட்டுள்ளனர். பின்னர், தேநீர் மற்றும் கேக் ஆகியவற்றுக்கு பணம் கொடுக்குமாறு காமராஜ், அந்த இளைஞர்களிடம் கேட்டுள்ளார்.



அதற்கு அவர்கள், கேக் கெட்டுவிட்டதாகவும், அதற்கு பணம் கொடுக்க முடியாது எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அங்கு திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜார்களை தூக்கிப்போட்டு உடைத்து சேதப்படுத்தினார்.



மேலும், டீக்கடைக்காரரை அவர்கள் தாக்க முயன்றபோது, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் இளைஞர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய காமராஜ், தமது கடையில் இதுபோன்று நடந்துகொள்வது 2வது முறை என்றும் வேதனை தெரிவித்தார்.

மேலும், டீக்கடையைத் தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...