மனு அளிக்க வந்த மக்களை காக்க வைத்த விவகாரம் - தாராபுரத்தில் பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை கண்டுகொள்ளாமல், உயர்அதிகாரிக்கு மதிய உணவு ஆர்டர் செய்த வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம், அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. இவர் கடந்த 17-ந் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது அவருக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் வந்தது. இதையடுத்து, தனலட்சுமி, தனியார் ஓட்டலில் உயர்அதிகாரிக்கு உணவு வாங்கி வரும்படி உணவு பட்டியலை உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.

பின்னர் ஓட்டலுக்கு சென்ற உதவியாளரிடம் செல்போனில் உணவு வகைகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக கூறிக்கொண்டே இருந்துள்ளார்.



இதனால் மனுகொடுக்க வந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால் அதிருப்தி அடைந்ததோடு, தனலட்சுமியின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகப் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், தாராபுரம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் வருவாய் கிராமத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அலங்கியம் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணனை தாராபுரத்துக்கு நியமித்து உத்தரவிட்டார். மனு கொடுக்க வந்த பொதுமக்களை காக்க வைத்துவிட்டு, உயர் அதிகாரிக்கு உணவு ஆர்டர் செய்ததாக பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...