வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் - திருப்பூரில் வெறிச்சோடிய தாலுகா அலுவலகங்கள்!

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



வருவாய்த்துறையினரின் கோரிக்கைகள்:-

* வருவாய் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும்.

* உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பதவி உயர்வு ஆணைகளை விரைந்து வழங்கிட வேண்டும்.

* வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

* 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வருவாய் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும்.

* இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருப்பூரில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்களின்றி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...