உடுமலையில் சரக்கு வேன் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த அன்பழகன் (40), வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் பூலாங்கிணறு பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் பலியானார்.


திருப்பூர்: பூலாங்கிணறு பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (40). விவசாயியான இவர் சொந்த வேலை காரணமாக உடுமலைக்கு வந்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.



பூலாங்கிணறு பகுதியில் வந்த போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேனின் மீது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...