கோவை கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்பனை - ஒருவர் கைது!

கருமத்தம்பட்டி அருகே போலீசார் நடத்திய சோதனையில் காரில் 1.100 கிராம் அளவிலான கஞ்சா எடுத்துச் சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (31) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ராமாச்சிபாளையம் ரயில்வே பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் ஒரு கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (31) என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடேஸ்வரனை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும், 77081-00100 என்ற எண்ணிலும் வாட்ஸ் ஆப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...