கோவை விமான நிலையத்தில் ஆபத்துக் கால தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் முன்னிலையில், ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்தில் ஆட்சியர் முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் (கடத்தல் எதிர்ப்பு மாக்) மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆபத்து (ஹைஜாக்கிங்) ஏற்படும் பொழுது எவ்வாறு செயல்படுவது, மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தல், தீவிரவாத நிகழ்வுகள் ஏற்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொண்டு பொது மக்களையும் பயணிகளையும் பாதுகாப்பது, மறைந்திருந்து குற்றவாளிகளை தாக்குவது, ஆபத்துக் காலங்களில் எவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்வது, மோப்ப நாய்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.



இதில் CISF காவலர்கள் 135 பேர், AAIயை சேர்ந்த 15 பேர், BCAS யை சேர்ந்த 1 நபர், ATC யை சேர்ந்த 7 பேர், FIRE/AAI யை சேர்ந்த 4 பேர், BDDS போலிஸ் 10 பேர், மாநில காவல்துறையினர் 6 பேர் உட்பட 213 பேர் பங்கேற்றனர்.



இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குனர் சச்சின் தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...