பொள்ளாச்சி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பரிவார குடைகள் - திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை அன்பளிப்பு

பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், 42 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட பரிவாரக் குடைகள், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் போது, ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.



கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேதர் ஜோதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.



இக்கோவிலுக்கு பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் பொழுது பயன்படுத்தப்படும் பரிவாரக் குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் யூஜ்ய ஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை, சுவாமி விவேகாந்தா கலை நற்பணி மன்ற நிர்வாகிகள், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரூ 42 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பரிவார குடைகளை கோயில் அர்ச்சர்கள்களிடம் வழங்கினர்.

பிரதோஷம், மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் திருவீதி உலா வரும்போது இந்த பரிவாரக் குடைகள் ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...