நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம் - சமூக வலைதளங்களில் குவியும் இரங்கல்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம், நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 85.


தமிழ் திரையுலகில் 'தல' என ரசிகளால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்குமார் அண்மையில் நடித்து வெளியான, ‘துணிவு’ படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், அவரது தந்தையால் சுப்பிரமணியம் இன்று காலை மரணமடைந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த மணி என்கிற சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 85. மறைந்த சுப்பிரமணியத்திற்கு மோகினி என்ற மனைவியும், அஜித்குமாருடன் அனில் குமார், அனூப் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.

அஜித்குமாரின் தந்தையார் மறைவு செய்த கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இரங்கல்கள் குவிந்துவருகின்றன. இதேபோல் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் அஜித்தின் தந்தை மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தமிழ் திரையுலகினர் பலரும் தந்தையார் மறைவுக்காக அஜித்திடம் இரங்கல் தெரிவித்துவருகீன்றனர். மறைந்த அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

தந்தையின் மரணம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தந்தையின் இறுதிசடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். இறுதி சடங்கை தனிப்பட்ட முறையில் குடும்ப நிகழ்வாக நாங்கள் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...