டிவிஎஸ் வீகோ வாகனம் இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனமானது தனது டிவிஎஸ் வீகோ வகை இருசக்கர வாகனத்தை இரண்டு புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் ஆரஞ்சு மற்றும் டி-கிரே ஆகிய வண்ணங்களில் அந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வீகோ வாகனமானது பிஎஸ்4 தரநிர்ணய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 110 சிசி திறன் கொண்டு, சிவிடிஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எஞ்சினை கொண்டுள்ளது.

மேலும், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வரோ பேனல்கள், யுஎஸ்பி சார்ஜர் வசதி ஆகிய வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வீகோ வாகனங்கள் கோவையில் சில குறிப்பிட்ட வாகன விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு துணை அதிபர் அனிருத்தா ஹால்டர் கூறுகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் தரத்தின் மீதான கவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது 2016 ஆம் ஆண்டின் ஜேடி பவர் குவாலிட்டி சர்வே ஆப் இந்தியா என்னும் விருதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பெற்றுள்ளது. இதுவே பயனாளிகளிடமிருந்து எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம் ஆகும். 

வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இயங்கும் எங்கள் நிறுவனம் இப்புதிய வாகன அறிமுகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுடன் இணைந்து நாங்கள் இத்தருனத்தை கொண்டாடுகிறோம். 

இப்புதிய வீகோ வாகனத்தில் சின்க் பிரேக்கிங் வசதி, முழுவதுமான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வர் ஓக் மரத்திலான பேனல் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வாகனம் இளைஞர்களிடத்திலும், வாடிக்கையாளர்களிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...