பல்லடத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற உறுப்பினர்!

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் ரம்மி மசோதாவை ரத்து செய்யாத தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர்: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 வார்டு கவுன்சிலர்களில், ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்ட அரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.



இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை தமிழக ஆளுநர் இரண்டாவது முறையாக நிராகரித்தற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்லடம் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.



பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரை பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமனதாக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றினாலும், தமிழக ஆளுநர் அதை நிராகரித்து வருவதை கண்டிக்கும் வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...