கோவையில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

கோவை மாவட்டம் வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் மஞ்சு (30). இவர், கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் சென்ற போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை 3 பெண்கள் பறித்துச் சென்றனர்.



கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மூன்று பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி மஞ்சு (30). இவர் அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்தார். அப்போது அந்த பேருந்தில் முககவசம் அணிந்தபடி நின்றிருந்த 3 பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மஞ்சு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற 3 பெண்களை தேடி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...