பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக பலி

பல்லடம் அருகேயுள்ள சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் கட்டியிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.


திருப்பூர்: பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி மேய்ச்சலுக்குக் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக பலியானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர், விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் கட்டியுள்ளார்.



மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் மீது இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.



ஆசையாக வளர்த்த மாடு மின்னல் தாக்கி உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த பசுமாடு அவரது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...