கோவை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்

கோவை மாவட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், ஆனைமலை, அன்னூர் ஆகிய பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து உப்பிலிப்பாளையம் சிக்னல் வரை வரிசையாக நின்று பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை முன் வைத்தனர்.



இந்த மனித சங்கிலி போராட்டத்தில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும், முடக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் நியமான முறைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஜெகநாதன், பாலசுப்பிரமணியன், ஆனந்த், அரசு, கலைவாணன், சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...