திருப்பூர் 49வது சர்வதேச நிட் ஃபேர் கண்காட்சி - ரூ.400 கோடிக்கு வணிக விசாரணை நடைபெற்றதாக தகவல்!

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சியில் கோடை , குளிர் கால ஆடைகள், செயற்கை இழை ஆடை ரகங்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், குழந்தைகள் ஆடைகள், என பல்வேறு பின்னலாடை ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.



திருப்பூர்: இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச அளவில் புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுத்தரும் வகையில் திருப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியா நிட்பேர் அசோசியேஷன் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் 49வது சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சியானது, பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் மார்ச் 22-ந் தேதி துவங்கி 24 ந் தேதி வரை நடைபெற்றது.



இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற கோடை, குளிர் கால ஆடைகள், செயற்கை இழை ஆடை ரகங்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், குழந்தைகள் ஆடைகள், என பல்வேறு பின்னலாடை ரகங்கள், கண்காட்சியில் பங்கேற்ற பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் கண்காட்சியில் கலந்து கொண்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.



இந்தக் கண்காட்சியில், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள், வர்த்தக முகமை நிறுவனத்தினர் நூற்றுக்கணக்கானோர் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்தி உள்ளதாகவும், ரூ.200 கோடிக்கு உடனடி வணிகம் உருவாக்கப்பட்டதோடு, 400 கோடிக்கான வணிக விசாரணை நடைபெற்றதாகவும், இந்த கண்காட்சியின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பருத்தி ஆடைகளைத் தவிர மற்ற ஏற்றுமதி ஆர்டரை ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...