திருப்பூர் 49வது சர்வதேச நிட் ஃபேர் கண்காட்சி - ரூ.400 கோடிக்கு வணிக விசாரணை நடைபெற்றதாக தகவல்!

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சியில் கோடை , குளிர் கால ஆடைகள், செயற்கை இழை ஆடை ரகங்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், குழந்தைகள் ஆடைகள், என பல்வேறு பின்னலாடை ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.



திருப்பூர்: இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேச அளவில் புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுத்தரும் வகையில் திருப்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியா நிட்பேர் அசோசியேஷன் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் 49வது சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சியானது, பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் மார்ச் 22-ந் தேதி துவங்கி 24 ந் தேதி வரை நடைபெற்றது.



இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற கோடை, குளிர் கால ஆடைகள், செயற்கை இழை ஆடை ரகங்கள், குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், குழந்தைகள் ஆடைகள், என பல்வேறு பின்னலாடை ரகங்கள், கண்காட்சியில் பங்கேற்ற பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் கண்காட்சியில் கலந்து கொண்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.



இந்தக் கண்காட்சியில், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள், வர்த்தக முகமை நிறுவனத்தினர் நூற்றுக்கணக்கானோர் கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்தி உள்ளதாகவும், ரூ.200 கோடிக்கு உடனடி வணிகம் உருவாக்கப்பட்டதோடு, 400 கோடிக்கான வணிக விசாரணை நடைபெற்றதாகவும், இந்த கண்காட்சியின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பருத்தி ஆடைகளைத் தவிர மற்ற ஏற்றுமதி ஆர்டரை ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...