தாராபுரம் நகராட்சி பள்ளியில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் கயல்விழி!

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்ராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நகராட்சி பள்ளியில் அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்தராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே அங்கன்வாடி கட்டிடப் பணியில் முழுவதும் நிறைவடைந்த நிலையில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.



மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகராட்சி ஆணையாளர் ராமர் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கமலக்கண்ணன் மற்றும் சரஸ்வதி ராஜேந்திரன், ஷாலினி பவர் சேகர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில், தமிழகத்தில் எண்ணற்ற நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் அளிக்காத சில நல்ல திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது, என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...