பொள்ளாச்சி அருகே கோவிலை அப்புறப்படுத்தும் நோட்டீசை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

பொள்ளாச்சி அண்ணா நகர் அருகேயுள்ள கருப்பராயன் கன்னிமார் கோவிலை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கண்டித்து கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவிலை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த அண்ணா நகர் பகுதியில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் பழமையான கருப்பராயன் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகாலமாக கோவிலில் அங்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோவிலை அப்புறப்படுத்த கோரி, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீஸில் அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனை கண்டித்து பூசாரி சந்திரன் கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் திரண்டு பஜனை பாடல்களை பாடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கருப்பராயன் கன்னிமார் கோயில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மரத்தடியின் கீழே இருந்தது கோவிலுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கோவில் அருகேயுள்ள தனியார் லே-அவுட் உரிமையாளர் வழித்தடம் வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டு கோவிலை அப்புறப்படுத்த கூறியதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் கோவிலை அப்புறப்படுத்த விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...