தாராபுரம் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்!

தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையின் 2 ஓரங்களிலும் முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் சாலையோரங்களில் முறையற்று நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தாராபுரம் நகரின் மையப் பகுதியான பூக்கடை கார்னர் பகுதியில் இருந்து உடுமலை ரோடு, கரூர் ரோடு, ஜவுளி கடை வீதி, வசந்த ரோடு ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் எந்த பக்கம் பார்த்தாலும் சாலையின் இரண்டு ஓரங்களிலும் முறையற்ற முறையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சில வாடிக்கையாளர்கள் வணிக நிறுவனங்களுக்குள் தனது வேலை நிமித்தமாக செல்கின்றனர்.



சாலை ஓரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் இரவு நேரங்களில் சாலையில் வாகனம் செல்வதற்கு வழி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி விபத்துக்கள் ஏற்படவும் அதிக அளவில் வாய்ப்புள்ளது.



மேலும், அரசு டவுன் பூக்கடை கார்னரில் இருந்து உடுமலை ரோடு செல்லும் வரை அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பேருந்துகள் செல்ல முடியாமல் தினந்தோறும் திணறிய வண்ணம் உள்ளது. இதே நிலை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைகின்றனர்.

எனவே சாலையில் இரண்டு ஓரங்களிலும் முறையற்று நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை ஏதாவது சாலையில் ஒருபுறமாக நிறுத்தினால் வாகன நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...