கொங்கு மண்டலம் ஓ.பி.எஸ்-ன் கோட்டையாக உள்ளது - அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உறுதி

கோவை புளியகுளம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், தென் மண்டலம் மட்டுமல்ல, கொங்கு மண்டலமும் ஓ.பி.எஸ்-ன் கோட்டையாக உள்ளது, அங்கு அவருக்கு அதிகமான ஆதரவாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.



கோவை: கொங்கு மண்டலம் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக உள்ளது என அதிமுக ஓபிஎஸ் அணி கோவை மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் புளியகுளம் விநாயகர் கோவிலுக்கு ஜெயலலிதா வேடம் அணிந்த சிறுமியுடன் வந்து ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜை செய்தனர்.



அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் பகுதியில் பகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதிமுக (ஓபிஎஸ்) அணி மாநகர் மாவட்ட கழக செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு வந்தனர்.



அதனைத் தொடர்ந்து பகுதி கழக அலுவலகம் திறக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் மோகன்ராஜ் பேசியதாவது, தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, கொங்கு மண்டலமும் ஓபிஎஸ் யின், கோட்டையாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆதரவு பெரிய அளவில் உள்ளது.

இன்று நடந்த கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்துள்ளனர். ஓபிஎஸ் உத்தரவின் பேரில் தற்போது இந்த நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட நிகழ்ச்சிகள் குறித்து அவர் எங்களுக்கு தெரிவிப்பார்.

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு கோவையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஓபிஎஸ் வர உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக ஓபிஎஸ் அணியினர் பேரணியின் போது ஜமாத்துகள் அடித்தும், நடனங்கள் ஆடியும் புளியகுளம் சாலையில் வலம் வந்தனர்.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...