ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்!

ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை விதித்ததையும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததையும் கண்டித்தும் கோவையில் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கியதைக் கண்டித்தும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான. எம்.என்.கந்தசாமி, முன்னாள் மேற்கு மன்ற தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...