கோவை சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் கனமழை - 20,000 வாழை மரங்கள் சேதம்!

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் திடீரென காற்றுடன் பெய்த மழை வெளுத்து வாங்கிய நிலையில், வடம்பச்சேரி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரிமலை பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.


கோவை: சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் காற்றுடன் பெய்த மழை காரணமாக 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் வடம்பச்சேரி, செஞ்சேரி புதூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளன.



பயிரிடப்பட்ட வாழைகள் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்நிலையில், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் பகுதிகளில் 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மரங்கள் சேதமடைந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சுல்தான் பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர்கள் சாய்கண்ணன், தினகரன், மந்திராசலம், வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரசாந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...