கோவை இடையர்பாளையத்தில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

இடையர்பாளையம் பகுதியில் திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.



கோவை: கவுண்டம்பாளையம் பாஜக மண்டல அலுவலகத்தை மண்டல தலைவர் விஜயகாண்டீபன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் பகுதியில், திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பாளையம் மண்டல தலைவர் விஜயகாண்டீபன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி விஜயகாண்டீபன் வரவேற்றார்.



இதைத் தொடர்ந்து கவுண்டம்பாளையம் மண்டல புதிய அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து இடையர் பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பீரித்திலட்சுமி, திருநாவுக்கரசு, கோபிநாத், ரமேஷ், பொருளாளர் செந்தில்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், மண்டல பொருளாளர் சுரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார் மற்றும் மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...