கோவையில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கோவையில் இருந்து கேரளாவுக்கு 1.5 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாபுவை (47) போலீசார் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி கைது செய்த நிலையில், மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



கோவை: கோவையிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அருண் உத்தரவின்பேரில், கோவையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சேரன்நகர் பகுதியில் கடந்த மாதம் 27 ம் தேதி, 1.5 டன் ரேஷன் அரிசியை கோவை வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாபு (47) கேரளாவிற்கு கடத்த முயன்றார்.

அப்போது, அவரை கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது கோவை, பொள்ளாச்சியில் உள்ள காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், பாபுவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து, சிறையில் உள்ள பாபுவிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...