உடுமலையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கும் கருவூல அலுவலர் - குவியும் பாராட்டு!

உடுமலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வரும் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் இலவசமாக போட்டி தேர்வு நூல்கள் வழங்கி மாணவர்களை சார்நிலை கருவூல அலுவலர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் இரண்டில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிற்சி பெற்று அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமார், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வருகிறார். தற்பொழுது ரூ.10,000 மதிப்புள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையிலான நூல்களை வழங்கினார்.

கடந்த முறை நடந்த தேர்வில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 9 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில், இருவர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...