தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க புதிய வலைத்தளம் அறிமுகம்!

தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவும் வகையிலும், Block செய்யவும், கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட் போனை Unblock செய்யவும், மத்திய தொலை தொடர்புத்துறை சார்பில் CEIR என்ற புதிய வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



டெல்லி: தொலைந்த ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவும் வகையில் CEIR என்ற புதிய வலைத்தளத்தை மத்திய தொலை தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல. ஸ்மார்ட்போன் என்பது, வெறும் அழைப்புகளை செய்வதற்கும் எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் பயன்படும் சாதனங்கள் அல்ல. ஸ்மார்ட் போன்கள் மூலம் தற்போதைய இணைய உலகில் எதை வேண்டுமானாலும் சாத்திய படுத்த முடியும்.

தற்போதய காலக்கட்டத்தில் மனிதர்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்தால் தான் அவர் உயிருடன் இருப்பதாகவே எண்ணுகின்றனர். இவ்வாறு பயன்படும் ஸ்மார்ட்போன் தொலைந்து போவதோ அல்லது திருடப்படுவதோ மிகவும் மோசமான விஷயமாகும்.



இந்நிலையில் நீங்கள் தொலைத்த அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க உதவியாக தொலைதொடர்புத் துறை சார்பில், மத்திய உபகரண அடையாள பதிவேடு (Central Equipment Identity Register - CEIR) என்ற பிரத்யேக வலைத்தள பக்கம் (Website) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



இந்த வலைத்தள பக்கத்தில் தொலைந்து போன ஸ்மார்ட்போனின் IMEI எண்ணுடன் புகார் அளித்தால், திருடப்பட்ட அல்லது தொலைந்த ஸ்மார்ட் போன்களை Block செய்யலாம். கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை Unblock செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போனை வாங்க போகிறீர்கள் என்றால் அந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களைக் கண்டறிய இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...