பல்லடம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி!

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டன.



இதில், பாரம்பரியமான சிறு தானிய உணவு வகைகள், திருமணமான புதுமண தம்பதிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள், குழந்தைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என விதவிதமான உணவு முறைகளை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர்.



எள் உருண்டை, சிறுதானிய பாயாசம், கடலை உருண்டை, சத்துமாவு பாயாசம், காய்கறி சூப் போன்ற பல்வேறு விதமான உணவு வகைகளை போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக வட்டார அளவிலான போட்டியிலும், அதில் வெற்றி பெறும் குழுவினர் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற அழைத்துச் செல்லப்படுவர் என மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...