தாராபுரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரி - ஆடியோ வெளியாகி பரபரப்பு!

அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கித் தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கச் சொல்லி தொழிலாளர்களை அதிகாரி வற்புறுத்திய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம், சுமை தூக்கும் தொழிலாளர்களை லஞ்சம் வாங்கித் தர வலியுறுத்தும் அதிகாரி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.



தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம், சத்திரம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட சுமார் ஏழு இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகள் மற்றும் சுமைதொக்கும் தொழிலாளர்கள் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகளிடம் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு, கடந்த 10 நாட்களாக அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்களிடம், நெல் மணிகளை பிடிக்க வேண்டாம் என அரசு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் 40 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர மறுத்தால் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் இருவரும் அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதிகாரிகள் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் கேட்கும் ஆடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அதிகாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால், கடந்த இரண்டு மூன்று நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல், குவியல் குவியலாக தேங்கி கிடப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...