கோவை மாவூத்தம்பதி அருகே தென்னங்கன்றுகளை சேதப்படுத்திய ஒற்றை காட்டுயானை - விவசாயி வேதனை!

கோவை மாவூத்தம்பதி அருகேயுள்ள முருகன்பதி கிராமத்தில் விவசாயி சதீஸ்குமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, அங்கிருந்த 11 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய நிலையில், வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: மாவூத்தம்பதி அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மாவூத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட முருகன்பதி கிராமத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலத்தில் அடிக்கடி வன விலங்குகள் வருவது வழக்கம். இதைத் தடுக்கும் வகையில், அவர் பேட்டரி பென்சிங் வேலியும் அமைத்துள்ளார்.



கடந்த சில மாதங்களுக்கு முன் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை மரத்தை முறித்து பென்சிங் கம்பிமீது போட்டு உள்ளே புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்திச் சென்றது. இந்நிலையில், நேற்று நள்ளிரவும் சதீஸ்குமார் தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை, பழைய பாணியிலேயே மரத்தை முறித்து பென்சிங் வேலி மீது போட்டுள்ளது.



மேலும், விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 11 தென்னங் கன்றுகளை பிடுங்கி எறிந்துள்ளது. இதைப் பார்த்த விவசாயி நீண்ட நேரம் சத்தமிட்டு, அந்தக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்.

இந்நிலையில், 3 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்து வந்த தென்னங்கன்றுகளை காட்டுயானை சேதப்படுத்திய நிலையில், வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயி சதீஸ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...