பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு - கோவையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை கோவை மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



கோவை: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை கோவையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் எனவும் இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்காக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொதுச்செயலாளராக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளார். அதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது.

இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர்.



கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலை பகுதியில் உள்ள, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.



மேலும், இதய தெய்வம் மாளிகை முன்பு பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் எடப்பாடியார் வாழ்க, வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் என முழக்கங்களை எழுப்பினர்.



அப்போது செய்தியாளர்களை சந்தித்த செ.ம.வேலுச்சாமி பேசியதாவது,



நீதி தேவதைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுசிறு துருப்புகளை வைத்துக்கொண்டும் சட்டத்தின் ஓட்டைகளை வைத்துக்கொண்டும் இந்த இயக்கத்தை கெடுப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்த துரோகிகளுக்கு, பாடம் புகட்டுகின்ற வகையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தால், செய்து கொண்டே இருக்கலாம். இது தொடர்ந்து கொண்டே சென்றால் தொண்டர்கள் கொந்தளிக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...