தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம் - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில், காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


திருப்பூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் தாலுகா அலுவலக நுழைவாயில் முன்பாக இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த 20 ஆண்டுகள் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பு ஊதியம், ஊதியமற்ற நிலுவை உள்ளிட்ட ஜீவ காருண்யா கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், நூலகர் உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு காலம் வரை மற்றும் தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...