அதிமுக பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் தேர்வு - உடுமலை அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, உடுமலையில் உள்ள திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் அதிமுகவின் கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி சாலையில் உள்ள திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பும், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சிவசக்தி காலனி பகுதியிலும், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெதப்பம்பட்டி நால்ரோடு சந்திப்பிலும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.



இந்த இடங்களில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் அறிவுறுத்தல்படி அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...