உதகையில் மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா - இருளர் இன இளைஞர்கள் உற்சாக நடனம்!

உதகை அருகே சீகூர் வனபகுதியில் உள்ள இருளர் இன பழங்குடியின மக்களின் குல தெய்வமான மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வழிபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருளர் என்ற ஆதிவாசி மக்கள் உதகை அருகே உள்ள ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த மக்கள், தங்களது குலதெய்வமாக மாசி கரிய பண்ட அய்யனை வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலானது அடர்ந்த சீகூர் வன பகுதியில் அமைந்துள்ளது.



மிகவும் கரடு முரடான பாதை வழியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வரும் இருளர் இன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இந்தக் கோயிலுக்கான திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டிற்கான கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து, 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவில் அமைந்துள்ள சீகூர் வன பகுதிக்கு சென்று கடந்து சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர்.



ஒவ்வொரு நாளும் தங்களது கலாச்சாரப்படி பல்வேறு பூஜைகளை செய்த அந்த மக்கள், இறுதியாக அலங்கரிக்கப்பட்ட புலி வாகனங்களில் எழுந்தருளிய மாசிக் கரிய பண்ட அய்யன் மற்றும் சிறியூர் மாரியம்மனை இருளர் இன இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமந்தவாறு கோயில் வளாகத்தில் நீண்ட நேரம் நடனமாடினர்.



அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொறியை வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு நடந்துவந்து வழிபட்டுச் சென்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...