ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ம் தேதி தொடக்கம்! - நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டிற்கான கோடை விழா வரும் மே மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ந்தேதி தொடங்கவுள்ளதாக ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் தலைமையில் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



அதில், மே 6-ந் தேதி முதல் கோடை விழா தொடங்கவும், முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சியை மே.6 மற்றும் 7-ந்தேதி என 2 நாட்கள் நடத்த முடிவு செய்யபட்டது.

அதனை தொடர்ந்து, மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும், அதேபோல், மே 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



குறிப்பாக மே 19, 20, 21, 22, 23 ஆகிய 5 தேதிகளில் பிரத்திபெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடைப்பெறுகிறது.

மே 27, 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சியை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவ சுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...