பிரதமர் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி வருகிறார். மகா சிவராத்திரி தினமான அன்று 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலையை பிரதமர் திறந்து வைத்து பின்னர் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோக மையம் செல்கிறார்.

பிரதமர் வருகையை ஒட்டி ஆலந்துரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடடுத்தப்பட உள்ளனர். மேலும், வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரத்தை சுற்றிலும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி இன்று கோவை வந்தார். தொடர்ந்து, ஈஷா யோகா மையம் என்ற அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...