என்னது.. UPI-ல் பணம் செலுத்தவும் கட்டணமா..? - ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது!

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மொபைல் வாலட்டில் இருந்து ரூ.2000க்கும் மேல் பணம் செலுத்தும் போது 1.1 சதவீதம், பல்பொருள் அங்காடி - 0.9 சதவீதம், அஞ்சலகம், கல்வி - 0.7 சதவீதம் மற்றும் பெட்ரோல், டீசல் - 0.5 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


டெல்லி: வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் நடைபாதை வியாபாரிகள் முதல் சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல தரப்பினரும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டனர். இதன் காரணமாக ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் யுபிஐ பரிவர்த்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதற்கு தேசிய பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, உங்கள் மொபைல் வாலட்டில் (Mobile Wallet) இருந்து வியாபாரிகளுக்கு பணம் செலுத்தினால் அதற்கு 1.1 சதவீத கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண வசூல் விதிமுறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய பரிவர்த்தனை கழகத்தின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

2000 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த 1.1% கட்டணம் வசூலிக்கப்படும்.

உங்கள் மொபைல் வாலட் வழியாக வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டண முறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.

அதன்படி, பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்மை, ரியல் எஸ்டேட் போன்ற பண பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும், எரிபொருள் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணமும் வசூலிக்கப்படும்.

மேலும், ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும் போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும்.

இந்த கட்டண முறையானது, மொபைல் வாலட்டில் இருந்து பணம் அனுப்பும் போது மட்டுமே வசூலிக்கப்படுமே தவிர, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...