மன்காரா, லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்

மன்காரா மற்றும் லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் நாளை (பிப். 23) முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை அந்த நிலையத்திற்கான ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. கோவை- மேட்டுப்பாளையம்- கோவை சிறப்பு பயணிகள் ரயில் எண் 06152 மற்றும் 06153 ரத்து

2. ரயில் எண் 56604 சொரனூர்- கோவை பயணிகள் ரயில் ரத்து

3. ரயில் எண் 56650 கண்ணூர்- கோவை பயணிகள் ரயில், மற்றும் ரயில் எண் 56651 கோவை- கண்ணூர்பயணிகள் ரயில் சொரனூர் ரயில் நிலையம் முதல் கோவை வரை ரத்து.

4. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையம் முதல் சொரனூர் வரை ரத்து

5. ரயில் எண் 13352 ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்கள் தாமதமாக ஆழப்புலா ரயில் நிலையத்திற்கு வரும். சொரனூர் சத்திப்பில் இருந்து ஒட்டப்பாளையம் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க 45 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

6. ரயில் எண் 12678 எர்னாக்குளம்- பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மன்னனூரில் இருந்து ஒட்டப்பாளம் ரயில் நிலையத்திற்கு இடையிலான தூரத்தை 75 நிமிடங்கள் தாமதமாக கடக்கும்.

பிப்ரவரி 27ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 56650 கண்ணூர்முதல் கோவை வரும் பயணிகள் ரயில் மற்றும கோவையில் இருந்து கண்ணூர்செல்லும் பயணிகள் ரயில் ஆகிய இரு ரயில்களும் சொரனூர் ரயில் சந்திப்பில் இருந்து கோவை ரயில் சந்திப்பு வரை இயக்கப்படாது. 

2. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் பாலக்காட்டில் இருந்து திரிசூர் வரை ரத்து செய்யப்பட்டள்ளது.

3. ரயில் எண் 22637 சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...