ப்ரீத் அனலைசர் சர்ச்சை - சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்!

சென்னையில் மதுப்பழக்கமே இல்லாத நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயபேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலையில் சாலிகிராமம் நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பணியிலிருந்த சட்டம் ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்ட காவலர்கள் தீபக்கின் காரை மறித்து, அவர் மது அருந்தியுள்ளாரா என்று ப்ரீத் அனலைசர் கருவியை வைத்து சோதனை செய்தனர்.

அப்போது தீபக் மது அருந்தியதாகவும், அவரது உடலில் 45சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகவும் கூறி அவருக்கு அபராதம் விதித்தனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர், தனக்கு மது அருந்து பழக்கம் இல்லை என்றும், இயந்திரம் கோளாறாக உள்ளதாகவும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது தொடர்பான ரசீதில் கையெழுத்திடுங்கள் என கூறியுள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து, தான் மது அருந்தவில்லை எனத் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, போலீஸ் வாகனத்திலிருந்து, இரண்டு இயந்திரத்தை வைத்து சோதனை செய்ததில், அதில் தீபக் மது அருந்தவில்லை என்றும், அவரது உடலில் 0 சதவீதம் ஆல்கஹால் எனவும் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் போக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் தீபக் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களையும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களையும் விட்டுவிட்டு 1000 வழக்குகள் கட்டாயம் பதிய வேண்டும் என்பதற்காக பழுதான இயந்திரத்தை வைத்து, சோதனை செய்து பொய் வழக்கு போடுகின்றனர்.

குடிப்பழக்கம் உள்ளாத தம்மிடம், குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம். இது காலத்திற்கும் என்னை துரத்தும் என வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.



இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை இதுபோன்ற நிகழ்வு நடந்தது இல்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் உள்ளன. அவைகளில் இதுபோன்ற பிரச்னைகள் இருந்ததில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...