கோவை வெள்ளலூரில் லாரி கிளினருக்கு கத்தி குத்து - இருவர் கைது!

கோவை வெள்ளலூரை சேர்ந்த லாரி கிளீனர் கோகுலகிருஷ்ணன் (23) பணம் கேட்டுக் கொடுக்காததால், ஆத்திரமடைந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுகுடிக்க பணம் கொடுக்காததால் லாரி கிளீனரை கத்தியால் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மது போதையில் நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25), கிஷோர் (25), ஆகிய இருவரும் கோகுலகிருஷ்ணனை இடைமறித்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

ஆனால் கோகுலகிருஷ்ணன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சர்புதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலகிருஷ்ணனை குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அங்கிருந்த கோகுலகிருஷ்ணனின் நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...