கோவை வெள்ளலூரில் லாரி கிளினருக்கு கத்தி குத்து - இருவர் கைது!

கோவை வெள்ளலூரை சேர்ந்த லாரி கிளீனர் கோகுலகிருஷ்ணன் (23) பணம் கேட்டுக் கொடுக்காததால், ஆத்திரமடைந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுகுடிக்க பணம் கொடுக்காததால் லாரி கிளீனரை கத்தியால் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மது போதையில் நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25), கிஷோர் (25), ஆகிய இருவரும் கோகுலகிருஷ்ணனை இடைமறித்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

ஆனால் கோகுலகிருஷ்ணன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சர்புதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலகிருஷ்ணனை குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அங்கிருந்த கோகுலகிருஷ்ணனின் நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...