கோவையில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் - ஒருவர் கைது, 2 பேர் தப்பியோட்டம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் இரவு நேரத்தில் பையில் சந்தனக் கட்டைகளுடன் சுற்றித்திரிந்த கும்பலை போலீசார் துரத்தியதில், சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய 2 பேரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலணி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையோடு மூன்று பேர் வந்துள்ளனர்.

போலீசார் நிற்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

அவர்களை போலீசார் விரட்டியதில், ஒருவர் பிடிப்பட்டார். அந்த நபர் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது32) கூலி தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சந்தனமரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாரிமுத்துவை கைது செய்த போலீசர் 12 சந்தனமரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற விஜய், சசிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...