கோவை அருகே வீடு புகுந்து பைக் திருடும் இளைஞர் - வீடியோ வெளியீடு

மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து பைக் திருடும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் இளைஞர், பைக்கை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து பைக் திருட முயன்றார். வாகனம் பூட்டு போட்டு இருந்ததை கண்டு திரும்பிய இளைஞர், அப்பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு பைக்கையும் திருட முயன்றார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வீடுகளிலும், தெருக்களிலும் பொது இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கோடை காலம் என்பதால் வீடுகளைத் திறந்து வைத்து உறங்க வேண்டாம். வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை பூட்டி விட்டுச் செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...