உடுமலையில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வுக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு கல்விக்கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழுவானது அமைக்கப்பட்டு மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

பள்ளிக்கு அளிக்கப்படும் நிதி மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஆகியவை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் தீர்மானத்தின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்வருகிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உடுமலை ஒன்றிய பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் கிருத்திகா, பள்ளி மேலாண்மை குழு பற்றியும், இல்லம் தேடி கல்வி பற்றியும், நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டத்தைப் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினார்.

பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான், பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவம் பற்றியும், இந்த வருட பள்ளி மேலாண்மை குழு மூலமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். இறுதியாக, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சுஜினி நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...