தாராபுரத்தில் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை - கூட்டுறவு மத்திய வங்கி அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை!

தாராபுரத்தில் கூட்டுறவு மத்திய வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து, தங்கம், வெள்ளி உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் உள்ள ஆறாவது வீதியில் செல்லமுத்து என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் குண்டடம் மத்திய கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா, நிலவள வங்கியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.



மேலும் இவர் நேற்று மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒன்பது பவுன் நகை, வைர கம்மல், ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகள், மேலும் மூன்று லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.



இதுகுறித்து செல்லமுத்து தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...