சூலூரில் மின்னணு கழிவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி, சூலூர் ஆர்விஎஸ் கல்லூரியில் தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மின்னணு கழிவுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது ஆர்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, சூலூர் பேரூராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பேரணி குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள், மக்கள் அன்றாட வாழ்வில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த கழிவுகளை முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...