நீலகிரியில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து பூங்கா பணியாளர்கள் நூதன போராட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள், நிரந்தர பணி, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள், சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த எட்டு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பூங்கா பணியாளர்கள் மரத்துக்கு மனு கொடுத்தல், ஒப்பாரி பாடல், குளத்திற்குள் இறங்கி போராட்டம் என பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒன்பதாவது நாளாக இன்றும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளிடம் பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.



இதுவரை அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது. தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர போவதாவும் தெரிவித்தனர்.

பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் உதகை குன்னூர் கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...