கோவை சூலூர் அருகே குளத்தில் மிதந்த 90 வயது மூதாட்டி சடலம் - போலீசார் விசாரணை!

சூலூர் அருகேயுள்ள குளத்தில் குட்டியம்மாள் என்ற 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே குளத்தில் 90 வயது மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே குளத்தில் மூதாட்டி ஒருவரது சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளனர்.



தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் ஆதவாணன் தெருவைச் சேர்ந்த குட்டியம்மாள் என்பதும், கணவர் இறந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே இன்று காலை முதல் அந்த மூதாட்டியை காணவில்லை என புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூதாட்டியின் மரணம் விபத்தா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...