வால்பாறையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும்படி கோரிக்கை!

வால்பாறையில் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும், தூய்மை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்வதோடு, ஊதிய உயர்வு வழங்ககோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி மூலம் பொது மக்களுக்கு பயன்பாடக்கூடிய வளர்ச்சி பணிகளை செய்துதர வலியுறுத்தி தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்ட கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஏஐடியுசி சங்க பொதுச்செயலாளர் மோகன் தலைமையில் வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தூய்மை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்வதோடு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவற்றின் பணிகளை நிறைவு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும், தொழில் வரி பிடித்து செய்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் தேவையான பணிகளை நகராட்சி மூலம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...