தாராபுரம் நகராட்சிக் கூட்டம் - பள்ளிகளில் காலை சிற்றுண்டி, குடிநீர் தேவைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு!

குப்பைகளை அப்புறப்படுத்த ரூ. 4.02 கோடி, முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பள்ளிகளில் சமையல் கூடம் கட்ட ரூ.28 லட்சம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முன்னேற்பாடாக ரூ.60 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்குவது உள்ளிட்ட 86 தீர்மானங்கள் தாராபுரத்தில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆணையாளர் ராமர் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.



தாராபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் வார்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சித் தலைவர் பாப்பு கண்ணன் பதிலளித்தார்.



1-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் சிலருக்கு வீட்டுமனை பட்டா கிடையாது. வீட்டு வரி ரசீது கொடுத்தால் குடிநீர் இணைப்பு வழங்க முடியுமா? என திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நகராட்சித் தலைவர், வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கும் நகராட்சி சார்பில் தண்ணீர் கொடுப்பது நம்முடைய கடமை. வீட்டுமனை ரசீது கொடுத்தால் போதும். தண்ணீர் இணைப்பு கொடுக்கலாம் என்றார்.



இந்தக் கூட்டத்தில் குப்பைகளை அப்புறப்படுத்த ரூ.4.02 கோடியும், முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பள்ளிகளில் சமையல் கூடம் கட்ட ரூ.28 லட்சமும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முன்னேற்பாடாக ரூ.60 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்குவது உள்ளிட்ட 86 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வெ.கமலக்கண்ணன், சாந்தி, முபாரக் அலி, துரை சந்திரசேகர், நாகராஜ் முத்துலட்சுமி, புனிதா, சீனிவாசன், சக்திவேல் ஸ்ரீதரன், ஷாலினி பவர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...