தாராபுரத்தில் திமுக நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் - நாளை நடைபெறும் என அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும். நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.


திருப்பூர்: தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் இது தொட்ரபாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கீழ்க்கண்ட இடங்களில் நடக்கிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜன் முன்னிலை வகிக்கிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு தாராபுரம் சிவரஞ்சனி திருமண மண்டபத்தில், தாராபுரம் நகரம், தாராபுரம் ஒன்றியம், சின்னக்காம்பாளையம் பேரூர், கொளத்துப்பாளையம் பேரூர் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு மூலனூர் எஸ்.ஜே.எம். திருமண மண்டபத்தில், மூலனூர் கிழக்கு ஒன்றியம், மூலனூர் மேற்கு ஒன்றியம், கன்னிவாடி பேரூர், மூலனூர் பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...