ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேசுபவர்கள் ஹிந்து விரோத சக்திகள் என, கோவையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டி


கோவையில் அமைந்துள்ள ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், மதவாதி காருண்யா மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுப்போம் என கோவையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு மேப்டியளித்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை  மாநில அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பணத்திற்காக மகப்பேறு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகமும் ஒன்று. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் உதவியுடன் விவசாயிகளின் கவலைகளை நீக்க ஆய்வு செய்து தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதை எதிர்ப்பவர்கள் இந்து விரோத சக்திகள், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மத ரீதியாக பாகுபாடுகள் இல்லை.

காருண்யா பல்கலைக் கழகம் காட்டாறுகளை தடுத்தும், அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி இருப்பதாலும் மலைவாழ் மக்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக் கழகம் மீது பாஜக சட்டப்படி வழக்கு தொடரும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுயமாக சிந்தித்து தைரியமாக செயல்பட வேண்டும். திமுக, அதிமுக கட்சிகள் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த குடும்ப ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது" என அவர் தெரிவித்தார்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...